search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி கழுத்து அறுப்பு"

    கணவர் அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட தகராறில் 2-வது மனைவியின் கழுத்தை அறுத்த முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    செங்குன்றம்:

    சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் முகம்மது ரஷீத். இவர், செங்குன்றத்தை அடுத்த பாலவாயலில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும், வங்காள தேசத்தை சேர்ந்த சுராகாத்தூண் (வயது 28) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ரேஷ்மி (7) என்ற மகளும், முகமது ஷஜின் (3) என்ற மகனும் உள்ளனர்.

    சுராகாத்தூணின் உறவுப்பெண் ஜெரினா பேகம்(25). வங்காள தேசத்தை சேர்ந்த இவருக்கு, சென்னையில் மாப்பிள்ளை பார்ப்பதற்காக கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் அவருக்கு சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை.

    இதற்கிடையில் சுராகாத்தூண், “எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது. எனவே எனது கணவரை நீ, 2-வது திருமணம் செய்துகொள்” என ஜெரினாபேகத்திடம் கூறினார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து சென்னை வந்த சில மாதங்களிலேயே ஜெரினாபேகத்தை முகமது ரஷீத் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெஷ்மி(5) என்ற மகள் உள்ளார். தற்போது ஜெரினாபேகம் 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

    திருமணத்துக்கு பிறகு முகமது ரஷீத் 2-வது மனைவி ஜெரினாபேகம் மீது அதிக பாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுராகாத்தூணுக்கும், ஜெரினாபேகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று காலை முகமது ரஷீத் வேலைக்கு சென்று விட்டார். வழக்கம்போல் சுராகாத்தூணுக்கும், ஜெரினாபேகத்துக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுராகாத்தூண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜெரினாபேகத்தின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெரினாபேகம் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் புழல் உதவி கமிஷனர் ரவி, செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பலராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், சுராகாத்தூணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    குடும்பத் தகராறில் கர்ப்பிணி என்றும் பாராமல் கணவரின் 2-வது மனைவியின் கழுத்தை முதல் மனைவி அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    கும்பகோணம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி தனது வயிற்றில் மதுபாட்டிலால் குத்தியதால் காயம் அடைந்தார்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோணுலாம்பள்ளம் அடுத்த திட்டசேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி கொடியரசி (24). இவர்களுக்கு சிபாசினி (5), சந்தித் குமார் (3) ரேஷ்மா (1½) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    செந்தில்குமாரின் எதிர் வீட்டில் பார்த்திபன் (26) என்ற வாலிபர் தனது தாய் லட்சுமியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் பார்த்திபனுக்கும், கொடியரசிக்கும் இடையே பழக்கம் காரணமாக இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவர் செந்தில்குமாருக்கும், கொடியரசிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் புத்தாண்டு அன்று பார்த்திபன், தனது செல்போனில் கொடியரசிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பேசியதாக கூறப்படுகிறது. இதை பற்றி கேள்விப்பட்ட செந்தில்குமார் , மனைவியின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செந்தில்குமாரை கண்டித்து கொடியரசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் மனைவி மீது கடும் ஆத்திரத்தில் செந்தில்குமார் இருந்து வந்தார். தொடர்ந்து நிம்மதியில்லாமல் தவித்து வந்த அவர் , மனைவியை கொன்று விட முடிவு செய்தார். இன்று அதிகாலையில் செந்தில்குமார் கண் விழித்தார். அப்போது தூங்கி கொண்டிருந்த கொடியரசியை பார்த்து ஆத்திரம் அடைந்தார். உடனே வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கொடியரசி கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியதால் அவர் அலறி துடித்தார்.


    இதனால் மனைவி இறந்து விட்டால் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களே என்று செந்தில்குமார் பயந்தார். உடனே அவர் மதுபாட்டிலால் தனது வயிற்றை கிழித்தார். இதில் அவரது குடல் சரிந்து ரத்தம் வெளியேறியது.

    இதற்கிடையே கொடியரசின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரையும், செந்தில்குமாரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் செந்தில்குமார் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி திருப்பனந்தாள் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×